Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகாகஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் இரத்ததான முகாம்னந்தா மகளிர் கல்லூரியில் எஸ்.பி அப்பேரல்ஸ் பன்னாட்டு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தம்

நவம்பர் 09, 2023 06:10

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி, அரசு மருத்துவமனை, இராசிபுரம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், ஓ.சௌதாபுரம் ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு இரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில்; நடைபெற்றது.  

இந்த முகாமை கல்லூரி முனைவர் மா.செந்தில்ராஜா வரவேற்று துவக்கி வைத்தார். இரத்ததான முகாமின் விழிப்புணர்வு பற்றி இராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  

இந்த முகாமிற்கு செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் அரசு மருத்துவமனை, இராசிபுரம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், ஓ.சௌதாபுரத்திலிருந்து வருகை புரிந்து முகாமை சிறப்பித்தார்.

மேலும் இந்த இரத்ததான முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இரத்ததானம் செய்தனர். மதியம் 1 மணியளவில் முகாம் இனிதே நிறைவேறியது. முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்